மாகாணசபைத் தலைமையின் ஆளுமை கேள்விக்குறி!

Tuesday, July 4th, 2017

முதலமைச்சருக்கும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்டக் கருத்துப் பரிமாற்றம் ஊடகம் ஒன்றில் தலைப்புச் செய்தியாக வரும் வகையில் வெளியே கிடைக்கப்பெற்றமை மாகாண சபைத் தலைமையின் ஆளுமையை விவாதத்துக்கு உரியதாக்கியிருக்கின்றது என வடக்கு மாகாண முதல்வருக்கு கடிதம் மூலம் விசனம் தெரிவித்திருக்கின்றார்.

புளொட் அமைப்பைச் சேர்ந்தவரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினருமாக க.சிவநேசன் பவான். பிரபல ஊடகவியலாளர் சிவாரம் படுகொலை சம்பவத்துடன் மேற்படி உறுப்பினர் சிவநேசனுக்குத் தொடர்பாக இருப்பாக சில தரப்புக்களால் பேசப்படுவதால் அவருக்கு மாகாண அமைச்சத் பதிலியை வழங்குவத குறித்து பரிசீலிக்க முடியாமல் இருக்கின்றது என்ற சாரப்பட முதல்வர் மின்னஞ்சலில் பதில் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியிருந்தார் என்று கூறப்படுகின்றது.

இரு தரப்புக்கு இடைப்பட்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் ஊடகம் ஒன்றில் வெளியானமையை அடுத்தே உறுப்பினர் சிவநேசன் மேற்படி விசனம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை மதல்வருக்கு நேற்று அனுப்பினார்.

அந்தக் கடிதத்தின் முழு விவரம்:

ஜீலை 2ஆம் திகதி உதயன் நாளிதழின் தலைப்புச் செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், எனதும் எனது கட்சியினதும் மன உளைச்சல்களையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் பத்திரிகை ஒள்றில் தலைப்புச் செய்தியாக வரும் வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றமதாக்கியுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அவற்றுக்கான பதில்களும் பகிரங்கமாக்கப்படுவதில் மாகாண சபை தலைமையின் ஆளுமை விவாதத்திற்குரியதாகிறது. எனக்குத் தாங்கள் தந்த பிதல் கடிதத்தின் பிரகாரம், சிவாரம் வழக்கு விடயத்தில் முழுமையான விவரங்களை தாங்கள் பெற்றிருக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்ற அதேவேளை, இது தொடர்பாக தங்களின் என் மீதான சந்தேகமான நிலைப்பாடு எனக்கும் எனது குடும்பத்திற்கும், நான் சார்ந்த கட்சிக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதென தெரியப்படுத்துகின்றேன்.

நீங்கள் அறிந்த சிவராம் ஓர் பத்திரிகையாளர், ஆனால் எம்மைப் பொறுத்தவரையிலும் சிவராம் எமது கட்சியின் முன்னாள் செயலாளர் என்பதுடன் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திற்கு முற்பட்ட ஒர் ஆயுதம் தாங்கிய எமது இயக்க போராளி. 2005 இல் கொல்லப்பட்ட அவரது கொலை வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்தவொரு விடயம்

சிவராம் வழக்கில் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ என்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் குற்றம்சாட்டவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தவோ தானுமில்லை. மேலும் அரசியல் ரீதியாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ எவருமெ என்னை இது தொடர்பில் எச் சந்தர்ப்பத்திலும் குற்றஞ்சாட்டியமையோ கிடையாது. இவ்விடயத்தில் நான் எந்த வித்ததிலும் தொடர்புப்பட்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாக அரனவருக்குமே தெரிந்த விடயம். வடக்கு மாகாண சபையில் நான் உறுப்பினராக வந்த காலம் தொட்டே தங்கள் நோக்கங்களையம், திட்டங்களையும் முன்னிறுத்திச் செயற்படும் ஒருவனாகவே இருந்துள்ளேன். வடமாகாண சபையில் நான் முதலமைச்சர் சார்பான அணிக்குரியவனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கேன்.

அதேவேளை முல்லை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக போராடிவரும் நான், அமைச்சரவை வாரியத்தில் முல்லை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று தங்களிடம் பல முறை கோரிக்கையை முன்வைத்துள்ளேன். இத எனக்கு அமைச்சுப் பதவியை கோரியதாக அர்த்தப்படாது. நானோ எனது கட்சியோ எந்தக் காலத்திலும் அமைச்சுப் பதவிக்காக எவரிடடும் கோரிக்கை வைத்தாமை கிடையாது.

அதே நேரத்தில் பல இடங்களில் புதிய அமைச்சரவையின் நியமனங்கள் பற்றி மறைமுகமாகத் தாங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவ கட்சி மற்றும் முல்லை மாவட்ட பிரநிதித்துவம் எனும் இரண்டு அடிப்படைகளில் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி எமது கட்சிக்கு கிடைக்கலாம் என்ற கருத்து பரவலாக காணப்பட்டது. அதில் ஒரு நியாயம் கருதுகிறேன். ஆனால் எனா அரசியல் வளர்ச்சியை பொறுப்ப முடியாதவர்களாகவும் முல்லை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கிடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ள – என் மீதோ அல்லது என் கட்சி மீதோ அரசியல் குரோதம் கொண்ட சிலரால் தாங்கள் தவறாக முடிவுக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளீர்கள் என்பதே எனது புரிதலாகவுள்ளது.

மேலும் இவ்விடயம் சம்பந்தமாக கலந்துரையாடலுக்கு எனக்கு எந்தவித சந்தர்ப்பமும் வழங்காமல், என் கருத்தக்களையோ பெறாமல் சந்தேகங்கள் நிறைந்த முடிவுக்கு வந்தமையும் அவை பத்திரிகைகளில் வெளிவரும் சூழலை உருவாக்கியமையும் மாபெரும் தவறு என்றே நான் கருதுகிறேன்.

முதலமைச்சராகிய உங்கள் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில் உங்களை விலத்த முடியாதவாறு எனது கட்நியும் நானும் உங்களுக்கு துணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது நீதிமன்றத்தில் நிறைவு பெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும், என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச் செயலே இதுவென நான் கருதுகிறேன். இவ்விடயத்தில் நீங்களும் தமிழ் மக்களும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்திற்காகவே நான் இக் கடிதேத்தை எழுதுகிறேன்.

Related posts: