பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Monday, December 25th, 2017

புத்தாண்டு காலத்தில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சம்பந்தப்பட்ட பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய கொழும்பு நகரத்தில் மாத்திரம் 4 300 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்தைக் குறைப்பதற்காக இவ்வாறான சாரதிகளைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டம் நகரங்களுக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts: