புதிய 3 அரச மருத்துவ பீடங்கள் – உயர் கல்வி அமைச்சு!

Wednesday, July 5th, 2017

புதிதாக அரச மருத்துவ பீடங்கள் மூன்றை அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குருநாகல், இரத்தனபுரி, மொறட்டுவை ஆகிய இடங்களில் இவை ஸ்தாபிக்கப்படவுள்ளது. முதலாவது மருத்துவபீடம் இந்த ஆண்டு இறுதியில் குருநாகலில் திறந்து வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இரத்தினபுரி அரச மருத்துவபீடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும். மொறட்டுவபீடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: