புதிய மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை நாளை !

புதிய மாணவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
மாவட்ட மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையும் விட மூன்று மடங்கு அதிகமான விண்ணப்பதாரிகள் அவர்களின் தகுதிக்கு அமைய நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்முக பரீட்சை தேசிய கல்வியியல் கல்லூரி மட்டத்தில் இடம்பெறும். நாடு முழுவதும் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 பாடநெறிகளுக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!
இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் கிடைக்கப்பெறவில்லை - அமைச்சர...
பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
கடுமையான வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வெளியானது!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் இதுவரை எந்தத் த...