புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை: அஸ்கிரிய பீடம்
Monday, July 3rd, 2017
அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு அனைத்து சங்க சம்மேளனங்களும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அஸ்கிரிய பீட சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
புத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அஸ்கிரிய பீட சங்க சம்மேளனத்தின் பிக்குகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் தலைமையில் அஸ்கிரிய பீடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.அதில் கலந்து கொண்ட அஸ்கிரிய பீட அனுநாயக்க ஆணமடுவே தம்மதஸ்சி தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு உறுப்பினர் ஊறுலவத்தே தம்ம ரக்கித்த தேரர் ஆகியோர் இதனைக் குறிப்பிட்டனர்.
Related posts:
வறட்சி நிவாரண செயற்பாடு குறித்து கலந்துரையாடல்!
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் - கல்வியமைச்சர் பேராசிர...
19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு - திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்...
|
|