பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
Thursday, May 11th, 2017ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.
இன்றையதினம் வருகைதரும் பாரதப் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவு விருந்துபசாரம் ஒன்றை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு விசேட வாகனப் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நாளையதினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
Related posts:
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் இணையத்தளத்தினூடாக!
நேர்மையுடன் கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க விசேட சட்ட வரைவு – துறைசார் தரப்பினர...
திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடிய...
|
|