பாதீடு: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

Friday, November 17th, 2017

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நாடாமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் இஎதிராக 58 வாக்குகளும்  அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊறப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் எதிராக வாக்கனித்தனர்.

நாளை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம்  ஆரம்பமாகுகின்றது. இந்த விவாதம் டிசெம்பர் 9ஆம் திகதி வரை காலை 9.30 தொடக்கம் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் விவாதிக்கப்படவுள்ளது.

நாளை ஜனாதிபதி, பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச ஆணைக்குழுக்கள்இ பாராளுமன்றம், ஆளும் கட்சி அமைப்பாளர், எதிர்க்கட்சி அலுவலகம் உள்ளிட்ட 27 துறைகள் சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளன.

Related posts: