பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை – கல்வி அமைச்சர்
Monday, June 5th, 2017
நாட்டில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் மனோநிலையை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்களையும் சொத்துக்களையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் உளவளத்தை மீண்டும் பலப்படுத்தி சமூக மயப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் ஏனைய பாடசாலைகளில் பணிபுரியும் உளவியல் ஆலோசக ஆசிரியர்களினதும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்களினதும் ஆதரவும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு!
புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் - சுகாதார பூச்சியியல் அதிகாரிகள்...
விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!
|
|
|
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்களுக்கு...
தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யா மிரட்டல்...
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...


