பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு!
Friday, January 19th, 2018
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்வி அமைச்சில் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்பதுடன் அதேவேளை ஆசியர்கள் பாடசாலைகளில்தொலைபேசி பயன்படுத்துகிறார்கள். இதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
ஆனால் தொலைபேசி என்பது அனைவருக்கும் தேவையான பொருளாக மாறிவருகின்றது. ஆகவே தேவை ஏற்படின் ஆசிரியர்கள் அவர்களது ஓய்வு அறையில்பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன...
பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...
இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|