பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் – றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!

Friday, September 6th, 2019

யாழ்ப்பாணம் பாசையூர் அந்தோனியார் விளையாட்டுக் கழக மைதானத்தினதும் அப்பகுதியில் வசிக்கும் மக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிலக்கீழ் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாநகர சபை முறியடிப்பு றெமீடியஸ் விசேட பிரேரணை சபையில் சமர்ப்பித்தார்.

யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

பாசையூர் அந்தோணியார் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு குறித்த காலப்பகுதியில் குளாய் பொருத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்திலேயே அப்பகுதியில் வசிக்கும் மக்களினதும்  மைதானத்தினதும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பலப்படுத்தக் கூடியதாக அமையும்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாநகர சபை காலம் தாழ்த்தாது விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் றெமீடியஸ் முதல்வரின் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் குறித்த பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கும் யாழ்.மாநகர முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: