நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய எரிபொருள் கையிருப்பில் உண்டு – அமைச்சர் அர்ஜுன!
Tuesday, November 7th, 2017
பாவனையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று பெற்றோலியவளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் எரிபொருள் தொடர்பான குழப்பநிலையை சிலர் தோற்றுவித்ததினாலேயே பெற்றோல் போன்ற எரிபொருளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிலர் பெற்றோல் தொடர்பில் ஏற்படுத்திய குழப்ப நிலையின் காரணமாக பலர் போத்தல்களிலும் , கான்களிலும் அளவுக்கதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை கொள்வனவு செய்து வெளியில் விற்பனை செய்துள்ளனர். எரிபொருளுக்கான போலியான நெருக்கடி நிலையை ஏற்படுத்தி சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டமையினால் கான்களுக்கும் போத்தல்களுக்கும் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.
Related posts:
|
|