நாட்டில் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு!
Sunday, April 30th, 2017
சவுதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை ஹிக்கடுவை, நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில் வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
Related posts:
பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது - பிரதமர் மஹிந்த ராஜபஷ !
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம...
|
|
|


