நாட்டில் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு!

Sunday, April 30th, 2017

சவுதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது உயிரிழந்துள்ளார்.

75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை ஹிக்கடுவை, நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில் வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.

Related posts:


சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்க...
தெல்லிப்பழை புற்று நோய் பிரிவு தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு எதிராக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்...
இந்தியப் பிரஜைகளே திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் – சுகாதாரா அதிகாரிகள் தெரிவிப்...