நாட்டின் நலனை முன்னிறுத்தியே அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம்!
Thursday, September 7th, 2017
அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டமை சிறந்த நோக்கத்துடன் நாட்டின் நலனை கருதியே என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உற்பத்தி தொடர்பான வரி விசேட கட்டளைகள் குறித்த விவாத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதேபோன்று நிவாரண அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திர முறையினை தாமதித்தாயினும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி அளித்ததாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
Related posts:
ஐ.நா.வின் கருத்து அபாண்டமானது - நிராகரிக்கின்றது இலங்கை!
கண்நோயை கட்டுப்படுத்துவதற்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவத...
ஐரோப்பிய ஒன்றியம் - சீனா இடையிலான நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதற்கு பிரான்ஸ் முக்கிய பங்காற்ற வேண்டும...
|
|
|


