தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை கிடையாது – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Friday, August 25th, 2017

அரசாங்கத்திற்கு உள்ளுராட்சி மன்றத்தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை இல்லை என்று உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா  உள்ளுராட்சி தேர்தல் திருத்தச்  சட்டமூலத்தை சமர்பித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஒரு அமைச்சரின் தேவைக்கு அமைய எல்லை நிர்ணயம் இடம்பெற்றது. இதன் மூலம் சகல அரசியல் கட்சிகளுக்கும்  நியாயம் கிடைக்கவில்லை என்றும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை  அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: