தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அடுத்த மாதம்!

Saturday, March 31st, 2018

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அதிக டெங்கு பாதிப்புக்குள்ளான 15 மாவட்டங்களின் 50 பொதுசுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் தனியார், அரச நிறுவனங்கள் பாடசாலைகள் ஆகியனவற்றிற்கு சுகாதார குழுக்கள் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்புகளை நடத்தவுள்ளன.

Related posts: