தென்னிந்தியாவில் உள்ள மாணவர்கள் தொடர்பில் இலங்கை நடவடிக்கை!

Saturday, March 28th, 2020

தென்னிந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்களின் தகவல்களை இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகம் படிமுறைப்படுத்தி வருகிறது.

அவர்களின் சுகாதார நலன்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தென்னிந்தியாவில் இலங்கையின் சுமார் 600 மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் இதுவரை 191 மாணவர்கள் தம்மை உயர்ஸ்தானிகரத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைத்தளத்துக்கு சென்று இணையத்தின் ஊடாக தம்மை இலங்கையர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அவசர நிலைமைகளின் போது உதவி செய்வதற்காகவே இந்த பதிவு கோரப்பட்டுள்ளது.

Related posts: