துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

Tuesday, February 27th, 2018

இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த  சம்பள அதிகரிப்பு 2018 ஜனவரி மாதம் முதல் சம்பளத்துடன்  சேர்த்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த ஆண்டில் ஆயிரத்து 330 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. துறைமுகங்களின் செலவினம் குறைக்கப்பட்டு வருமானம் அதிகரித்தமை இதற்கான காரணமாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதுடன் செலுத்தப்படவிருந்த கடன் சுமையில் இருந்து விடுபட முடிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் ஏழு துறைமுகங்களிலும், கடந்த ஆண்டு எட்டு தசம் ஐந்து வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க தெரிவித்தார்.

Related posts: