தலைமன்னாரில் காணாமல் போன படகு புங்குடுதீவில் மீட்பு!

Tuesday, June 12th, 2018

தலைமன்னாரில் இரு மீனவர்களுடன் காணாமல் போன படகு நேற்றையதினம் புங்குடுதீவில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி தலைமன்னார் ஊருமனைப் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்கள் பயணித்த படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நேற்றையதினம் புங்குடுதீவு தெற்கு ஆஸ்பத்திரியடி துறைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்கள் தொடர்ந்தும் கடற்பரப்புகளில் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: