தலைமன்னாரில் காணாமல் போன படகு புங்குடுதீவில் மீட்பு!
Tuesday, June 12th, 2018தலைமன்னாரில் இரு மீனவர்களுடன் காணாமல் போன படகு நேற்றையதினம் புங்குடுதீவில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி தலைமன்னார் ஊருமனைப் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்கள் பயணித்த படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நேற்றையதினம் புங்குடுதீவு தெற்கு ஆஸ்பத்திரியடி துறைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்கள் தொடர்ந்தும் கடற்பரப்புகளில் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளை மின்சாரம் தடைப்படும்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கையில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு!
நாளை காலை தளர்த்தப்படுகின்றது ஊரடங்குச் சட்டம் - தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை அவசியம் என வலியுறு...
|
|