டெங்கு நோய் மருத்துவமனையாக மாறும் சைட்டம் கல்லூரி – லக்ஷ்மன் கிரியெல்ல

Saturday, June 24th, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொறுப்பிலெடுத்து, டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார் இந்த விவாத்தில் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தவறான விதத்தில் மருத்துவர்களை உருவாக்கும் மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார் இதேவேளை, இதன்போது கருத்தொன்றை முன்வைத்தபோதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: