சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்!

Monday, October 23rd, 2017

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்குமாயின் அது அந்த நிறுவனத்தைத் தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தவிர்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

சைட்டம் தொடர்பில் விரைவில் காத்திரமான தீர்மானத்தை அரசு அறிவிக்கும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

மகாநாயக்கர்களும் இது தொடர்பில் உடனடியாகத் தீர்வொன்றை அறிவிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சைட்டம் எந்தக் காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: