சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டாலும் போதிய வருமானம் ஈட்டமுடியவில்லை – பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கவலை!

Wednesday, July 4th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான குடும்ப வருமானங்களின்றி பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

துணுக்காய் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 3 ஆயிரத்து 942 குடும்பங்களில் 610 வரையான குடும்பங்கள் பெண்தலைமைத்துவக் குடும்பங்களாக காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது நிலவும் வறட்சி, தொழில் வாய்ப்பின்மை ஆகிய காரணங்களால் இப்பகுதியில் வாழும் சுமார் 610 வரையான பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் கூடுதலான குடும்பங்கள் தொழில் வாய்ப்புகளின்றி பெரும் க~;டங்களை அனுபவித்து வருகின்றன.

மேற்படி குடும்பங்கள் பல சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதற்கான போதிய வருமானம் இன்மை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நுண்கடன் நிதிநிறுவனங்களில் கூடுதலான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகூடிய வட்டிக்கு கடன்களை பெற்று அவற்றை மீளச் செலுத்துவதில் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: