சம்பூர் அனு மின் நிலையத்திற்கு பதில் சூரியமின் நிலையம்அமைக்கிறது இந்தியா
Thursday, May 4th, 2017
திருகோணமலை மாவட்டத்தில் 50 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம ஒன்றை அமைக்க இந்திய அரசுக்கு அனுமதி அளிக்கப் படவுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டு ரத்துச் செய்யப்ப்பட்ட 500மெகாவாட் நிலக்க மின் உற்பத்தி நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இந்த சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப் படவுள்ளதாக அறிய முடிகிறது.
பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த வார இந்திய விஜயத்தின் பொது செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய கூட்டு அபிவிருத்தி ஒப்ந்ததிற்கு அமையவே இந்த சூரிய சக்தி மின் நிலையம அமைக்கப்பட உள்ளதாகவம் 100 மெகாவாட் மின் உற்பத்திக்கு இந்த நிலையம் விஸ்தரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. .
முனைய ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட நிலக்கரி மின் திட்டதின் உற்பத்திச் செலவு அதிஉச்சம் என்பதால் மைத்திரி அரசால் ரத்துச் செயப்பட்டதாகவும் ஆனால் இந்த சூரிய சக்தி மின் நிலையதில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் மகளுக்கு வழங்க முடியும் எனவோம் இது தொடர்பான செய்திகள் தேரிவிகின்றன
Related posts:
|
|