சமூக வலைத்தளங்களில் குரோதம் கருத்துகளை கட்டுப்படுத்த சட்டம்!
Wednesday, March 21st, 2018சமூக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது கண்டியில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான தேவை குறித்து அவதானம் அதிகரித்துள்ளது இதன்படி கடந்த வாரம் வரையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் குரோத மற்றும் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேவை குறித்து அவதானம் அதிகரித்துள்ளது இதன்படி கடந்த வாரம் வரையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட வலைத் தளங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது .
இந்த நிலையில் குரேத மற்றும் இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்காகத் தேவையான சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதே வேளை இவ்வாறு சகல வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் பொது சம நிலை பேணப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகமவினால் இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டும் போது பொதுமக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
Related posts:
|
|