இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் – இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!
Saturday, May 4th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்றையதினம் இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு எடுக்க்ப்படவில்லை : யாழ். மாவட்ட அரசாங்க ...
அரசில் இருந்து விலகுவேன் – அர்ஜுன ரணதுங்க!
இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் சந்திப்பு - ந...
|
|
|


