கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தவருக்கு விளக்கமறியல்!

Saturday, November 14th, 2020

வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது சிஐயப்பட்ட ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை குறித்த சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரையே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: