கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்துறை பாதிப்பு!

Thursday, June 1st, 2017

கிளிநொச்சிமாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த தொழில்துறையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடபகுதியில் தற்போது நிலவும் கடுமையான வரட்சிகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் வெகுவாககுறைவடைந்துள்ளது.

இதன்காரணமாக நன்னீர் மீன்பிடியைமேற்கொள்ளமுடியாதநிலையில் இத்தொழிலைநம்பிவாழும் தாம் பாரியபொருளாதாரநெருக்கடிகளுடன் வாழ்ந்துவருவதாககவலைதெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டதமதுஅவலநிலையினைக் கருத்தில் கொண்டு அரசிடமிருந்து நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனதொழில்துறையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: