காணிகள் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை : இராணுவ பேச்சாளர் சுமித் அத்தப்பத்து!

Tuesday, June 5th, 2018

தமது பாவனையில் இல்லாத காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய சில காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டுவருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இராணுவம் பயன்படுத்தாத அல்லது சிறிய அளவில் பயன்படுத்தப்படும் காணிகளைவிடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய குறித்த காணிகளில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமாக உடமைகள் அகற்றப்பட்டு வருவதாகவும், காணிகளை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் வலி வடக்கில் உள்ள சுமார் 30 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உரிமையாளர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக இராணுவத்தால் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக காங்கேசன்துறை வீதியின் இருமருங்கிலும் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts:

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த முடியும் - உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெ...
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், 52 வீத கட்டில்கள் கொவிட் த...
பணம் பறிக்கும் மோசடி கும்பல் - உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவ...
ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை - நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன...
வெப்பச் சலனம் -  முதலாம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கில் பரவலாகமழை கிடைக்கும் -  ...