களுத்துறையின் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி !
Friday, May 26th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் களுத்துறை, புளத்சிங்கள ,வெயங்கல்ல மற்றும் அகலவத்தை பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய – மொரவகந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர தெர...
பயங்கரவாதத் தடை சட்டத்திற்கமைய பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை அடுத்தவாரம் கூடுகிறது!
|
|