எதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்!
Monday, April 23rd, 2018
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பிலான புதிய வர்த்தமானி ஜனாதிபதியினால் இன்று(23) வெளியிடப்படும் எனவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
ஆசிரியர்கள் விதிகளை மீறாமல் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் : பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை!
வெப்ப அதிகரிப்பு - குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதாக விசேட வைத்திய நிபுணர்...
|
|
|


