எதிர்கட்சி பக்கத்தில் 16 கதிரைகள் வேண்டும்:  நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன!

Friday, April 20th, 2018

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்குமாறு பாராளுமன்ற பொது செயலாளரிடம் எழுத்து மூலம் கோரப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கையெழுத்து இடப்பட்ட எழுத்து மூல ஆவணம் இன்று(20) கையளிக்கப்படும் என கூறப்பட்டிருந்த போதிலும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக அந்த செயற்பாடு விரைவில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

.

Related posts: