உயர்நீதிமன்றம் செல்கிறது பெப்ரல் !

Wednesday, August 16th, 2017

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைத் தேர்தல்களையும் பிற்போட முயற்சிக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்படுமானால், அது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கண்டியில் நேற்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வரும் 24 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரும் -...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்க...
நாட்டில் தீவிரமடையும் டெல்டா - சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேரா...