இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Wednesday, September 7th, 2022

முல்லைத்தீவு மற்றும் அலம்பில் கடற்கரையில் வைத்து 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகில் இருநடத மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: