இலங்கையில் தினமும் 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து – அதிர்ச்சித்தகவல்

Thursday, July 13th, 2017

இலங்கையில் தினமும் விபத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையானவர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்ன  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன், இந்த காலப்பகுதியிலேயே 2 அல்லது 3 பேர் காயமடைகின்றனர் எனவும் மேலும் கூறியுள்ளார்.

விபத்திற்கான முக்கிய காரணம் சாரதி சான்று இல்லாமல் வாகனத்தை செலுத்துவது மற்றும் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: