இலங்கைப் பயணத்தை பிற்போட்ட ஜேர்மன் ஜனாதிபதி?
Monday, March 12th, 2018
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபராங் வால்ட்டர் ஸ்டெயின்மீயர் (Frank-Walter Steinmeier) தமது இலங்கைக்கான விஜயத்தை பிற்போட்டுள்ளார்.
பேர்லின் அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி 28ம் திகதி வரையில் அவர் இந்தியா மற்றும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார். எனினும் கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அதனை அடுத்து அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் அவரது விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தும் இது குறித்து ஜேர்மனி அரசாங்கம் உத்தியோகபூர்வமான அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை.
Related posts:
நாடாளுமன்றம் அனுமதி - இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பூட்டு!
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் ...
|
|