இராஜினாமா செய்யும் கடிதத்தை அனுப்பியுள்ள மஹிந்த தேசப்பிரிய!

Friday, November 29th, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய 2020 வரையிலும் பதவியில் இருக்கலாம்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதன் பின்னர், அது அரசியலப்பு பேரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அரசியலமைப்பு பேரவை தீர்மானம் ஜனாதிபதிக்கு மீளவும் அனுப்பிவைக்கப்படும்.

அதன் பின்னரே, மகிந்த தேசப்பிரியவின் கடிதம் தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும். இதுவே, சாதாரண சம்பிரதாயமும் ஆகும்.

Related posts:

சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோ.சைக்கிள் திருடியதாக வழக்கு - பொலிஸாரை எச்சரித்து நீதிமன்று தள்ள...
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவ...

சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு தலா 5 லட்சம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 வீடுகளுக்கு தேசிய வீடமைப...
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வழங்கியமை பாராட்டத் தக்கது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
கிராமப்புற கடன், சமூக பாதுகாப்பு திட்டங்களில் கவனம் செலுதப்படுகின்றது - குறுகிய மற்றும் நடுத்தர கால ...