இன்புளுவன்சா நோயினால் மேலும் 48 பேர் பாதிப்பு!

Tuesday, June 5th, 2018

தென்மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா நோயினால் மேலும் 48 பேர் பாதிக்கப்பட்டு தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகசுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 சிறுவர்கள் உட்பட 38  பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் பரவிச் செல்லும் நோய் காரணமாக இதுவரை 13 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்

இதனிடையே இலங்கையில் இருந்து சில நோய்களை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேச அமைப்பொன்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: