ஆசியாவின் ஆச்சரியம் மேலும் தாமதம்!
 Sunday, April 8th, 2018
        
                    Sunday, April 8th, 2018
            
ஆசியாவில் நிர்மாணிக்கப்படுகின்ற மிக உயரமான தாமரைக் கோபுரத்தை திறப்பதற்கு மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையிலும் கோபுரத்தின் ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படாமையினால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை தொடர்பான சிரேஷ்டபேராசிரியர் சமித மானவடு தெரிவித்துள்ளார்.
இந்தக் கோபுரத்திற்கு பொருத்த வேண்டிய சில உபகரணங்களை வழங்குவதற்கு நிறுவனம் தாமதப்படுத்தியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் உறுதி செய்யப்பட்ட பின்னர் மக்கள் பார்வைக்காக தாமரை கோபுரம் திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட பின்னர், ஆசியாவின் மிக உயர்ந்த கட்டடத்தை கொண்டமாக நாடாக இலங்கை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        