அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விசேட பிரிவை நிறுவ அமைச்சரவை அனுமதி!
Wednesday, January 4th, 2023அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக விசேட பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் குறித்த பிரிவு திறைசேரியின் கீழ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
திறைசேரியின் செயலாளர் பிரிவின் அனைத்து பங்குகளையும் சொந்தமாக வைத்திருப்பார்.
அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையின் புதிய வருமானச் சட்டம், முதலாளிகளுக்கு மட்டுமே சார்பானது எச்சரிக்கின்றனர் பொருளாதார வலுன...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
முட்டை உற்பத்தியாளர்கள் நெகிழ்வுப் போக்கை காட்டினால் இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் நளின் தெர...
|
|