அரச காணியில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காணி உறுதி!

Friday, June 15th, 2018

அரச காணிகளை அபிவிருத்தி செய்து நீண்டகாலமாக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வாழ்ந்து வருவோருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை காணி அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக நாடு முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் பெந்தர எல்ப்பிட்டிய தேர்தல் தொகுதியின் வத்துறுவில என்ற கிராமத்தில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த இந்த வேலைத்திட்டம் 10 லட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts: