அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை கோருகிறார் வடக்கின் ஆளுநர்!

Thursday, April 26th, 2018

மோசடி தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவு  பிறப்பித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணையின் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts:


மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்பட...
அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!