கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Saturday, June 3rd, 2017

இணுவில் கிழக்குகோயில் காணிகளில் குடியிருப்போர் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதிச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில் சென்றுகேட்டறிந்துகொண்டார்.

அண்மையில் குறித்தபகுதிக்குவிஜயம் மேற்கொண்டிருந்த இரந்திரதாசன் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள், பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக குடியிருக்கும் காணிகளுக்கான உரிமப் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் மக்கள் எடுத்துவிளக்கினர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய இரவீந்திரதாசன் குறித்த விடயத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.

Related posts:

பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுரு...
புதிய பயணிகள் நிழற்குடைக்கான அடிக்கலை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நாட்டிவைத்தார்!
தூரநோக்க சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருவது ஈ.பி.டி.பியே ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதனின் முய...
சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை - செல்லப்பிள்ளையார் வீதியில் மூன...
ஊழியர்கள் பழிவாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின. யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ச...