500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி?

Thursday, November 10th, 2016

இன்று முதல் இந்தியாவில் உள்ள வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை. வழிமுறைகள்

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முதலில் அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • பூர்த்திசெய்த படிவத்துடன் அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், என்ரிகா, பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை சமர்பிக்கலாம்.
  • ஒருவர் அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம்.
  • நவம்பர் 18 ஆம் தேதி வரை ஏ.டி.எம்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
  • நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து இது 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.
  • ஒரு நாளைக்கு காசோலை மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். ஆனால், ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
  • காசோலை மூலம் 20 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டால் அதன் பின் ஏ.டி.எம் பயன்படுத்த முடியாது.
  • வங்கிகளுக்கு நேரிடையாக செல்ல முடியாத நிலையில், உங்களுடைய ஒப்புதல் கடிதத்துடன் பிரதிநிதி ஒருவரை அனுப்பலாம்.
  • வங்கியில் அந்த பிரதிநிதி, ஒப்புதல் கடிதத்துடன் அவருடைய அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்.
  • டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள், அதன் பின், ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் குறிப்பிட்ட சில கிளைகளில் இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.

_92376059_gettyimages-621882206

Related posts: