பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுனர் ராஜினாமா !

Tuesday, March 15th, 2016
சீனாவின் இணையத் திருடர்கள் பங்களாதேசின் மத்திய வங்கியிலிருந்து பெருமளவு பணத்தை திருடிய விவகாரம் அம்பலமானதை தொடர்ந்து அந்த நாட்டின் மத்தியவங்கியின் ஆளுநர் அத்யுர் ரஹ்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
குறிப்பிட்ட பணத்தை இனந்தெரியாத நபர்கள் இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள மர்ம அரசசார்பற்ற அமைப்பின் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப முயன்றவேளையே இந்த வங்கித் திருட்டு தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மத்தியவங்கி ஆளுநர் அந்த நாட்டின் நிதியமைச்சரின் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Related posts: