பங்களாதேஷ் படகு விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

Friday, September 23rd, 2016

பங்களாதேஷ் பனாரிபாரா நகரில் சந்தியா நதியில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பனாரிபாரா நகரில் உள்ள சந்தியா நதியினுாடாக புதன்கிழமை 80 பேருடன் பயணித்த படகு கவிழந்து விபத்திற்குள்ளானதில் 30 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த படகில் பயணம் செய்த 50 பேர் பத்திரமாக மீட்புப்பணியாளர்களால் மீட்கப்பட்டள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில் இன்று 18 நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறித்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்தமையே விபத்திற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பங்களாதேஷில் போக்குவரத்திற்காக பலர் படகை பயன்படுத்துகின்றதுடன் அங்கு அடிக்கடி படகு விபத்துக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

download (1)

Related posts: