கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: மாலியில் 15 பேர் உயிரிழப்பு!

மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
Related posts:
தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு!
குறைந்த வயதிலேயே ஜெயலலிதா மறைந்து விட்டார்: கருணாநிதி இரங்கல்!
மக்காவில் தற்கொலைப்படை தாக்குதல்!
|
|