ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஆயிரக்கணக்கான சவுதி படையினர்!

Sunday, September 29th, 2019

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாரியதொரு தாக்குதலி பின்னர் பெருமளவான சவுதி அரேபிய படையினரை சிறைப்பிடித்துள்ளதாக யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் நிஜ்ரான் நகருக்கு அருகில் சவுதி அரேபிய படையினர் சரணடைந்ததாக ஹவுத்தி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான படையினர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும், இந்தத் தகவலை சவுதி அரேபியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Related posts: