வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் – கேரளா மாநிலம் முழுவதும் முடக்கப்படுமா என மக்கள் அசச்சம்!

Friday, September 15th, 2023

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது.குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில்  2 பேர் நிபா வைரஸினால் உயிரிழந்துள்ள நிலையில்   மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் எதிர் வரும் 10 நாட்களுக்கு  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நிபா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் சுகாதாரத்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் பொதுமக்கள்  அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் என்ற  கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு...
கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் - பொதுமக்களிடம...
கஜகஸ்தானுகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு !