வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு – இந்தோனேசியாவில் 31 பேர் உயிரிழப்பு!
Tuesday, April 30th, 2019இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் மீட்பு படையினர் சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related posts:
காவிரி விவகாரம்: தமிழகத்தில் செப்டம்பர் 16 முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
ஆளுநரின் முடிவுக்கு தி.மு.க. வரவேற்பு!
பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை... !
|
|