விமான விபத்து – கென்யாவில் 5 பேர் உயிரிழப்பு!
Thursday, February 14th, 2019கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.
விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகிறது.
மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இந்துக் கடவுளை வணங்கிய லண்டன் மேயர் சாதிக் கான்!
துருக்கியில் வரலாறு காணாத ஜனநாயக பேரணி!
மின்சார தடை: 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!
|
|