வான்வழி தாக்குதல்: சிரியாவில் 19 குழந்தைகள் உட்பட 42 பேர் பலி!

Wednesday, August 23rd, 2017

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ராக்கா பகுதியில் நடந்த அமெரிக்கா தலைமையிலான படையின் வான்வழி தாக்குதல்களில் பொதுமக்களில் 42 பேர் பலியாகியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அரசுக்கு எதிராக வன்முறையாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்குவதற்காக சிரிய அரசு இராணுவம் கொண்டு தாக்குதல் நடத்தியது.அரசுக்கு எதிரான இந்த போரில் இதுவரை 2 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படைகள் சிரியாவுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த ராக்கா பகுதியில் அமெரிக்கா தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 42 பேர் பலியாகியுள்ளனர்.அந்நகரில் 2வது நாளாக தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையினர் 50 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கைப்பற்றியுள்ளனர்

Related posts: